இந்தியாவில் இதுவரை 864 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலி
1 min read
So far 864 doctors in India have died of corona
10.5.2021
இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 864 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
டாக்டர்கள்
கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கதில் இந்தியாவில் கொரோனா என்ற கொடூர வைரஸ் பரவத் தொடங்கியது. இதில் எண்ணற்றோர் இறந்து போனார்கள். இந்த கொரோனாவுக்கு மருத்துவத்துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயரிழந்தனர்்
கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் 864 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்திய மருத்துவ கழகத்தின் இணையத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் இந்த ஆண்டு மட்டும் 126 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
தமிழ்நாடு,மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகளவு நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 86 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையில் இந்த ஆண்டு உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டுவருவதாக இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். மருத்துவத்தை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்காமல் மக்களுக்கு செய்யும் சேவை என நினைத்து பணியாற்றியவர் மருத்துவர் சண்முகப்பிரியா. திருமணமாகி நான்கு ஆண்டு கழித்து கருவுற்றிருந்த அவர் தன் உடல் நலனைவிடத் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணியாற்றுவதே அவசர அவசியம் என கருதினார்.
4 கர்ப்பிணி மருத்துவர்கள் உயிரிழப்பு
ஆனால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். சண்முகப்பிரியாவைப் போல் நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர்களின் எண்ணிக்கை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சைக்காக நோயாளிகள் அவதிப்படுவதுபோல் ஒவ்வொரு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ முன்கள பணியாளர்கள் அவதிப்படுகிறார்கள்.
காற்றோட்டம் இல்லாத கவச உடையை 12 மணிநேரத்திற்கு மேல் அணிந்துகொண்டு உணவருந்தவோ, கழிவறைக்குச் செல்லவோ கூட அவர்களால் முடியவில்லை. தங்களுடைய உடல் ஆரோக்கியத்தைவிட தங்களை நம்பி வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவே மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியா போன்ற ஏராளமான மருத்துவர்கள் களத்தில் உள்ளனர்.