தென் தமிழகத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in south Tamil Nadu
11.5.2021
இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்கள் வருமாறு:-
தென் மேற்கு அரபிக் கடலில் புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதன் மூலம் வரும் 14-ந் தேதி, தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இந்த தாழ்வுப் பகுதி, வடக்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக வரும் 16-ந் தேதி உருவெடுக்கும்.
இதன் மூலம் லட்சதீபம், கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வரும் 14-ந் தேதி முதல் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே மீனவர்கள் 14-ந் தேதிக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.