June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரேநாளில் 29,272 பேருக்கு கொரோனா்298 பேர் பலி

1 min read

Corona for 29,272 people and 298 killed in Tamilnadu one day

11.5.2021 –
தமிழகத்தில் ஒரே நாளில் 29,272 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 298 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,178 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 19,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,60,150 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,62,181 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்திய அளவில்

இந்திய அளவில் 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் வந்தது.

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.

3,876 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காவலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,56,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகர் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.