சபாநாயகராக அப்பாவு; துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி போட்டியின்றித் தேர்வு
1 min read
Father as Speaker; Ku. Pichandy elected unopposed as Deputy Speaker
10.11.2021
தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று பதவி ஏற்கிறார்கள்.
சபாநாயகர்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, 16-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்
சட்ட சபையின் சபாநாயகராக யார் இருப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
அப்பாவு வேட்புமனு
இந்தநிலையில், சபாநாயகருக்கான தேர்தலில் ராதாபுரம் எம்.எல்.ஏ.வான மு.அப்பாவு, துணை சபாநாயகருக்கான தேர்தலில் எம்.எல்.ஏ.வான கு.பிச்சாண்டி ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுவர் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது.
சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று பகல் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது வேட்பு மனுக்களை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அவை முன்னவர் துரை முருகன் வழிமொழிந்தார்.
போட்டியின்றி தேர்வு
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
அவர்கள் தேர்வு நாளை முறைபடி அறிவிக்கப்படும். அதன்பின் இருவரும் பதவி ஏற்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க.கள் பதவி ஏற்பு
இன்று 16-வது சட்டசபை சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்றனர். கொரோனா பாதித்த அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.