இறந்தவர் பெயரில் பரிந்துரை கடிதம் பெற்று ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த 3 பேர் கைது
1 min read
3 persons were arrested for obtaining a letter of recommendation in the name of the deceased and buying Remdecivir
10.5.2021
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த மருந்தை பலர் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். இதனால் அந்த மருத்தை சிலர் பிளாக்கில் விற்பதாக கூறப்படுகிறது. இதில் மோசடியும் நடக்கிறது.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை நேரடியாக வாங்க, மருத்துவரின் பரிந்துரை கடிதம், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்று, சி.டி.ஸ்கேன் சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருந்து வாங்க வந்த 3 பேரும் ஒரே மாதிரியாக தஞ்சாவூரிலுள்ள நேத்ரா சைல்டு கேர் என்ற மருத்துவமனை சார்பில் செல்வம் என்ற நபருக்கு பரிந்துரை எழுதி கொடுத்தது போன்று கடிதம் வைத்திருந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது, பரிந்துரையில் குறிப்பிட்டிருந்த தஞ்சாவூரைச் சேர்ய்தனர். மேலும், பரிந்துரை கடிதம் யாரிடம் இருந்து கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.