தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 30,621 new people in Tamil Nadu
13.5.2021
தமிழகத்தில் இன்ற புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,532 ஆண்கள், 13,089 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,991 பேரும், கோவையில் 2,835 பேரும், செங்கல்பட்டில் 2,173 பேரும், மதுரையில் 1,331பேரும், திருவள்ளூரில் 1,251 பேரும், கன்னியாகுமரியில் 1,079 பேரும், திருச்சியில் 940 பேரும், ஈரோட்டில் 910 பேரும், நெல்லையில் 781 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 174 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 99 ஆயிரத்து 727 ஆண்களும், 5 லட்சத்து 99 ஆயிரத்து 720 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
கொரோனாவுக்கு இன்று 297 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 768 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19,287 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 லட்சத்து 98 ஆயிரத்து 945 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் சிகிச்சையில் உள்ளர்.
மேற்கண்ட தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில்
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,37,03,665 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 4,120 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,52,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,10,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 17,72,14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.