கொரோனாவுக்கு புதுப்பெண் பலி ;கணவர் கவலைக்கிடம்
1 min read
New bride killed by Corona; husband Serious
13/5/2021
உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு புதுப்பெண் பலியானார். கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒரு திருமணம் நடைபெற்றது.
திருமணமான மறுநாள் மணப்பெண், கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்தது. மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
ஆனால் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் வைத்தே வைத்தியம் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் நிலைமை மோசமாகவே அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
சாவு
புதுப்பெண் மட்டும் அல்லாமல் அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்ட அவரது கணவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த புதுப்பெண் இறந்தார்.
அவருக்கு வயது 25. கணவர் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தில் 50க்கு மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டதாகவும் திருமண சடங்குகளுக்காக முகக்கவசத்தை கழற்றியதால் கொரோனா பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.