தமிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா; தென்காசிய் 11 பேர் சாவு
1 min read
Corona for 31,892 people in Tamil Nadu today; Tenkasi 11 dead
14.5.2021
தமிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,359பேர் ஆண்கள், 13,533 பேர் பெண்கள். இன்று 20,037 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,18,982 ஆக உயர்ந்தது.
288 பேர் சாவு
288 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 158பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கோவை
தமிழகத்தில் சென்னையில் இன்று 6538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டமாக மாறியுள்ளது. இன்று கோவை மாவட்டத்தில் 3197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்கட்டில் 2225 பேருக்கும், கன்னியாகுமரில் 1025 பேருக்கும், மதுரையில் 1250 பேருக்கும், திருவள்ளூரில் 1410 பேருக்கும், திருச்சியில் 1224 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 140 பேருக்கும், சிவகங்கையில் 242 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நெல்லை
நெல்லை 831 பேருக்கும், தென்காசியில் 443 பேருக்கும், தூத்துக்குடியில் 885 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லையில் இன்று 3 பேரும், தென்காசியில் 11 பேரும், தூத்துக்குடியில் 4பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.