ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; காலை 10 மணிவரைதான் கடை; டீக்கடைகளுக்கு அனுமதி இல்லை்; இ-பாஸ் கட்டாயம்.
1 min read
Increase in curfew restrictions; Shop until 10 p.m .; Tea shops are not allowed; E-pass mandatory.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; காலை 10 மணிவரைதான் கடை; டீக்கடைகளுக்கு அனுமதி இல்லை்; இ-பாஸ் கட்டாயம்.
14.5.2021
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இனி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரைதான் மளிகை, காய்கறி, இறைச்சக் கடைகள் திறந்து இருக்கலாம். டீக்கடை, நடைபாதைக்கடைகளுக்கு அனுமதி இல்லை்; இ-பாஸ் கட்டாயம்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
காலை 6 முதல் 10 மணி வரை
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
அதிக தூரம் செல்லக்கூடாது
பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.
நடைபாதை கடைகள்
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதைகடைகள் செயல்பட அனுமதி இல்லை.
தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.
இ-பதிவு முறை
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும்மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இபதிவுமுறை கட்டாயமாக்கப்படும். இ-பதிவு முறை 17.5.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும்.
மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.