அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
1 min read
Petition to the Supreme Court to set up oxygen production plants in all districts
16.5.2021
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விப்லவ் சர்மா ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமர் நிவாரண நிதி
பிரதமர் நிவாரண நிதியைக் கொண்டு உடனடியாக கொரோனா தடுப்பூசிகள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த நிதியைக் கொண்டு நாட்டின் 738 மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தையும், செறிவூட்டி நிலையங்களையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தை அமைக்க மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மின் மயானங்கள்
அனைத்து நகரங்களிலும் மின் மயானங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள மின் மயானங்களை பராமரிக்கவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
தொகுதி மேம்பாட்டு நிதியை வெளிப்படைத்தன்மையுடன் செலவிட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவி்ல் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.