தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது; இன்று 33,075 பேருக்கு தொற்று
1 min read
The incidence of corona in Tamil Nadu is slightly less; Today 33,075 people are infected
17/5/2021
தமிழகத்தில கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று புதிதாக 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,31,2916 ஆக அதிகரித்துள்ளது.
335 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது. இதில் இணைநோய்கள் இல்லாத 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 20,486 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,81,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,31,596 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.