தமிழகத்தில் 35,483 பேருக்கு கொரோனா: 422 பேர் இறப்பில் தென்காசில் 11 பேர் சாவு
1 min read
Corona for 35,483 people in Tamil Nadu: 422 deaths, 11 deaths in Tenkasi
24.5.2021
தமிழகத்தில் இன்று 35,483 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 422பேர் உயிரிழந்து உள்ளனர். 25,196 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:
35.483 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,42,344 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,725 பேர் ஆண்கள், 15,758 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10,93,786 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,48,520 ஆகவும் அதிகரித்து உள்ளது.
25,196 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,27,733 ஆக உயர்ந்தது.
422 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 182 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 240 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,468 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கு கீழ் வந்தது. நேற்று தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 485 ஆக உள்ளது.
சென்னையில் 5,169 பேருக்கும், கோவையில் 3,944 பேருக்கும், செங்கல்பட்டில் 1,982 பேருக்கும், ஈரோட்டில் 1352 பேருக்கும், கன்னியாகுமரியில் 1160 பேருக்கும், மதுரையில் 1139 பேருக்கும்,நாமக்கல்லில் 1032 பேருக்கும், தஞ்சாவூரில் 1176 பேருக்கும், திருவள்ளூரில் 1259 பேருக்கும், திருவண்ணாமலையில் 1006 பேருக்கும், திருப்பூர் 1446 பேருக்கும், திருச்சியில் 1407 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்காசியில் 11 பேர் சாவு
தென்காசியில் இன்று 339 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 11 பேரும் இறந்துள்ளனர். நெல்லையில் இன்று 486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இன்று 6 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் இன்று 843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் 6 பேர் இறந்துள்ளனர்.