இந்தியாவில் கொரோனா இறங்குமுகம்; ஒரு நாளில் 2.22 லட்சம் பேருக்கு கொரோனா
1 min read
Corona landing in India; Corona to 2.22 lakh people in a day
24/5/2021
இந்தியாவில் ஒருநாளில் 2.22 லடசம்பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4,454 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனாவின் இறங்கு முகம்
இந்தியாவில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த கொரோனாவின் இரண்டாவது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. நேற்று காலை 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று பதிவு செய்யப்பட்டு இருந்து. ஆனால் இன்று காலையில் கொரேரோனா பதிவு மேலும் குறைந்தது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,454 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக குறைந்துள்ளது.