2-வது தவணை ரூ.2 ஆயிரத்துடன் 14 மளிகைப் பொருட்கள் கிடைக்கும்
1 min read
Rs 2,000 and 14 groceries will be available on June 3
25.5.2021-
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ரூ.2 ஆயிரத்துடன் 14 மளிகைப் பொருட்கள் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூன் 3-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
நிவாரண நிதி
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 5 உத்தரவுகளுக்கான கோப்பில் கையெழுத்துப் போட்டார். அதில் ஒன்று தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம் வழங்குவதாகும்.
இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. அரசி ரேஷன் கார்டு உள்ள அனைவரும் பெற்றுக் கொண்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பணம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2-வது தவணை நிதி ரூ.2 ஆயிரம் மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறர்.
14 மளிகைப் பொருட்கள்
அதே நாளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது. இதையும் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.