June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கொரோனாவுக்கு பலி

1 min read

Puliyangudi police deputy superintendent kills Corona

2.6.2021

கொரோனா தொற்றால் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுவாமிநாதன் இறந்தார்.

போலீஸ் துணை சூப்பிரண்டு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் சுவாமிநாதன் என்பவர் போலீஸ் துணை சூப்பிரணடாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 20 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது,. இதனைத்தொடர்ந்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சுவாமிநாதன் உயிரிழந்தார்.

போலீஸ் துணை சூப்பிரண்டு கொரோனா தொற்றால் உயிரழந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.