June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சசிகலா ஆடியோ; சென்னையில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

1 min read

Edappadi Palanisamy-O. Panneerselvam meeting in Chennai

5.6.2021
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசினார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. தலைமைக்கழகத்துக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி திடீரென்று சென்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடப்பதால் அவர் வரவில்லை என்று தெரிவித்தார். இன்றைக்கு நல்ல நாள் என்பதால நான் கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தேன் என்றும் விளக்கம் அளித்தார்.

சந்திப்பு

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சென்று சந்தித்து பேசினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , ஆர்.காமராஜ், மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

சசிகலா தொண்டர்களுடன் தொலைபேசி பேசி அதை ஆடியோவாக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அப்போது அரசியலுக்கு வருவேன் என்றும் உங்களை சந்திப்பேன் என்றும் சசிகலா பேசியிருக்கிறார். இதனால் அவர் அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலா விசயத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.