தமிழகத்தில் கொரோனா 16,813 ஆக குறைந்தது; சாவு 358
1 min read
Corona in Tamil Nadu fell to 16,813; Death 358
10.6.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,813 ஆக குறைந்தது; சாவு எண்ணிக்கை 358 ஆக இருந்தது.
தமிழகத்தி்ல் கொரோனா
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 29 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று 17321 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 9,278 பேர் ஆண்கள், 7,535 பேர் பெண்கள். இன்று 32,049 பேர் கொரோனாவில் இருந்து இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,91,646 ஆக உயர்ந்தது.
358 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 358 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.(நேற்று 405 பேர் இறந்தனர்.) இவர்களையும் சேர்ந்து கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை (1223), கோவை (2236), ஈரோடு ( 1390) ஆகிய மாவட்டங்களி்ல் மட்டும்தான் ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்காசியில் 8 பேர் சாவு
நெல்லையில் இன்று 267 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 235 பேர் பாதித்த நிலையில் இன்று 8 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 345 பேர் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர்.