ஊரடங்கு நீட்டிப்பு; மதுகடைக்கள், சலூன் கடைகடளை திறக்க அனுமதி
1 min read
Curfew extension; Permission to open liquor stores and saloon shops
11.6.2021
தமிழகத்தில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதி்ல் மதுக்கடைகள், சலூன் கடைகள், கட்டுமான பொருட்கள் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மே 24 முதல், ஜூன் 7 வரை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு நடைமுறைப்படுத்தியது. பின் ஊரடங்கை, வரும் 14ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாதிப்பு அதிகமுள்ள மற்ற இடங்களில், ஒரு சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நோய் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன், அரசு ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் உயிர்களை காக்கவும், முழு ஊரடங்கை ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
- கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி.
சலூன் கடைகள்
- தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி
கண்கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டுமணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- பள்ளி, கல்லூரிகள்,பல்ககலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி.
*வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.
- ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி.
- இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
மதுக்கடைகள்
- 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.
- செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.
- வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டங்கள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள்
- பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.
சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.
11 மாவட்டங்கள்
தொற்று பரவல் அதிகமுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி ,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி
இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.