கொரோனா பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்; மருத்துவ குழு பரிந்துரை
1 min read
Do not vaccinate those who have been infected with the corona; Recommended by the Medical Committee
11.6.2021
கொரோனா பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
இடைவெளி காலம்
தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம்.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதற்கான கால இடைவெளியானது 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும். திட்டமிடப்படாத தடுப்பூசி திட்டம் உருமாறிய கொரோனாவை தூண்ட வழிவகுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.