இந்தியாவில் கொரோன பாதிப்பு 80,834 ஆக குறைந்தது; ஒரே நாளில் 3,303 பேர் பலி
1 min read
Corona infection in India drops to 80,834; 3,303 people were killed in a single day
13/6/2021
இந்தியாவில் கொரோனா குறைந்து வருகிறது. ஒரே நாளில் புதிதாக 80,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 3,303 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 6வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
நேற்று 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், அன்றைய தினம் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணிநேரத்தில் 80 ஆயிரத்து 834 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 989 ஆக உயர்வடைந்து உள்ளது.
3,303 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,303 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,70,384 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.26 சதவீதமாக உள்ளது. ஒரே நாளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 446 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 10,26.159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது