இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்பு
1 min read
Naphtali Bennett is the new Prime Minister of Israel
14.6.2021-
இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல்
மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால் நீடிக்க முடியவில்லை. அதனால் காபந்து பிரதமராக நெதன்யாகு நீடித்து வந்தார்.
கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
நப்தாலி பென்னட் பிரதமரானார்
அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. அரபு கட்சி தலைமையில் இந்த 8 கட்சிகளும் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன. இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள உள்ளன.
இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் யமினா கட்சி தலைவர் பென்னட் வெற்றிப்பெற்றதை அடுத்து, புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மோடி பாராட்டு
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இவரது ஆட்சி காலத்தில் இந்திய இஸ்ரேல் நாட்டு உறவு மேம்பட்டதாகவும், அவர் இந்தியாவுக்கு மிக துணையாக இருந்தார் என்றும் மோடி பாராட்டி உள்ளார்.