June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

1 min read

10 members of the same family killed in Gujarat

16.6.2021

குஜராத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியானார்கள்.

விபத்து

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 2 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களின் உடல்கள் தாராபூர் பரிந்துரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விபத்துக்குப் பிறகு, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட கலெக்டரிடம் விபத்து குறித்து பேசினார் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

==

இந்தியாவில் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா

16.6.2021

இந்தியாவில் கொரோனா ஒரு நாளில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் 9வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்று 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 2,726 பேர் கொரோனாவுக்கு பலியானதாக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 ஆக உயர்வடைந்து உள்ளது.

2,542 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 ஆக உள்ளது.
நேற்று 28,00,458 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.