June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7,817 ஆக குறைந்தது; 182 பேர் சாவு

1 min read

Corona impact in Tamil Nadu drops to 7,817; 182 deaths

20.6.2021

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 7,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 22 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது 69,732 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 17,043 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14பேர் இறந்துள்ளனர். கோவையில் இன்று ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அந்த மாவட்டத்தில் 904 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 17 பேர் இறந்துள்ளனர். ஈரோட்டில் 870 பேர் பாதித்தனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் 41 பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்தனர். தென்காசியில் 54 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 119 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் ஒருவர் இறந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.