தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்; ஸ்டாலின் கடிதம்
1 min read
Raise the vaccine quota for Tamil Nadu; Stalin’s letter
28/6/2021
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையைவிட அதிக தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையைவிட குறைவான தடுப்பூசிகளே இருக்கின்றன.
எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு 90சதவீதம், தனியார் மருத்துவமனைகளுக்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.