தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,804 ஆக குறைந்தது; 98 பேர் சாவு
1 min readCorona impact in Tamil Nadu drops to 4,804; 98 deaths
28.6.2021
தமிழகத்தில் இன்று 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 98 பேர் கொரோனாவுக்கு இறந்தனர்.
தமிழகத்தல் கொரோனா
தமிழகத்தில் கடந்த 38 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 47 நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று 4,804 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,70,678 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 2,742 பேர் ஆண்கள், 2,062 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 6,553 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,97,336 ஆக உயர்ந்துள்ளது.
98 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை
கோவையில் இன்று 597 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் இறந்துள்ளனர். ஈரோட்டில் 506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். சென்னையில் இன்று 291 பேர் பாதித்த நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 318 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் இறந்துள்ளனர்.
நெல்லை
நெல்லையில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சாவு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒருவர் இறந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.