இந்தியாவில் மேலும் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா்; 911 பேர் சாவு
1 min read
Corona for another 43 thousand people in India; 911 deaths
9/7/2021
இந்தியாவில் ஒரே நாளில் 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 43 ஆயிரத்து 393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 911 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36 கோடியே 89 லட்சத்து 91 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த நேற்று ஒரேநாளில் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.