தமிழகத்தில் 3,039 பேராக குறைந்த கொரோனா; 69 பேர் சாவு
1 min read
The lowest corona in Tamil Nadu at 3,039; 69 deaths
9.7.2021
தமிழ்நாட்டில் இன்று 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர்.69 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 49 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 58 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:- தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,13,098 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,713 பேர் ஆண்கள், 1,326 பேர் பெண்கள். இன்று 3,411 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,46,552ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்து உள்ளது.
கோவையில் 349 பேருக்கும், ஈரோட்டில் 230 பேருக்கும், சேலத்தில் 191 பேருக்கும், சென்னையில் 180 பேருக்கும், செங்கல்பட்டில் 156 பேருக்கும் தஞ்சையில் 179 பேருக்கும், திருப்பூரில் 176 பேருக்கும், திருச்சியில் 121 பேருக்கும், நீலகிரியில் 103 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 23 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை. தென்காசியி் 21 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 35பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.