June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒருநாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று; 895 பேர் சாவு

1 min read

Corona infection affects 41,506 people a day in India; 895 deaths

11-/7/2021
இந்தியாவில் புதிதாக 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 41,506 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு நாளில் 41 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 064 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தாக்குதலுக்கு 895 பேர் உயிரழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 08 ஆயிரத்து 040 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.