June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,405 பேருக்கு கொரோனா; சாவு 49

1 min read

Corona for 2,405 people in Tamil Nadu today; Death49

15.7.2021

தமிழகத்தில் இன்று 2,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 49 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 64 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,405 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,28,806 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,356பேர் ஆண்கள், 1,049 பேர் பெண்கள். 3,006 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,65,250 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,606 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் 256 பேருக்கும், தஞ்சையில் 163 பேருக்கும், ஈரோட்டில் 159 பேருக்கும், சேலத்தில் 155 பேருக்கும், சென்னையி்ல் 148 பேருக்கும், திருப்பூரில் 143 பேருக்கும், செங்கல்பட்டில்130 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும், தூத்துக்குடியில் 31 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியபபட்டது. இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.