5 மாதமங்களுக்குப்பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
1 min read
Devotees will be allowed to perform darshan at Sabarimala from tomorrow after 5 months
16.7.2021
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்குப்பிறகு நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில்
கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் இப்போது ஊரங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலையில் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்பட்டது. அதன்பின் மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
5 ஆயிரம் பக்தர்கள்
நாளை முதல் முதல் வருகிற 21-ந் தேதி வரை 5 நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவா்கள் முன்கூட்டியே இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.