இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி
1 min read
FILE PHOTO: A healthcare worker holds a vial of the Moderna COVID-19 Vaccine at a pop-up vaccination site operated by SOMOS Community Care during the coronavirus disease (COVID-19) pandemic in Manhattan in New York City, New York, U.S., January 29, 2021. REUTERS/Mike Segar/File Photo
75 lakh modern vaccine for India
20.7.2021
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்க மாடர்னா நிறுவனம் 75 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
விரைவில்..
இதற்கிடையே, நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், “மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன,” என்று கூறினார்.