இந்தியாவில் மேலும் 30,093 பேருக்கு கொரோனா; 374 பேர் சாவு
1 min read
Corona for a further 30,093 in India; 374 deaths
20.7.2021
இந்தியாவில் ஒரு நாளில் மேலும் 30,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 374 பேர் இறந்துள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 125 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்தது.
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 30,093 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரமாக பதிவானது.
இந்தியாவில் ஒரே நாளில் 45,254 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 03 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது.
374 பேர் சாவு
தற்போது 4.06 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரேநாளில் நாடுமுழுவதும் 374 பேர் கொரேனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 4,14,482 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.37 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜூலை 20) காலை 8 மணி நிலவரப்படி 41.18 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 53,64,908 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.