கொரோனாவால் வேலை இழந்த இரட்டை சகோதரர்கள் தற்கொலை
1 min read
Twin brothers who lost their jobs to Corona commit suicide
2.7.2021
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததால் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே இரட்டை சகோதரர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுவாக்குளம் அருகே இடுங்கடி புதுபரம்பை சேர்ந்தவர் அப்துல் சலாம் இவர்களது மகன்கள் நிசார் ஹான் மற்றும் நசீர் இருவரும் இரட்டை சகோதரர்கள் .இவர்கள் இருவரும் இன்றுகாலை வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
தற்கொலை
போலீசார் ஊரடங்கில் வேலை இல்லாதால் பண நெருக்கடி காரணமாக சகோதரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
இரட்டை சகோதரர்கள் முன்பு கிரேன் ஆபரேட்டர்களாக பணிபுரிந்தனர், ஆனால் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு வேலை இழந்தனர்.
வேலை இழப்பு
அவர்கள் 2019 ஆம் ஆண்டில் கோட்டயம் நகர கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ. 12 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் ஊரடங்கினால் தவணை செலுத்த முடியவில்லை
சில நாட்களுக்கு முன்பு, வங்கியில் இருந்து கடனை திருப்பித் தருமாறு நோட்டீஸ் வந்தது. பாலக்காட்டில் உள்ள தங்கையின் சொத்தை விற்ற பிறகு கடனை திருப்பி தருவதாக இருவரும் வங்கியில் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அது நடக்கவில்லை இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.