ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min read
Online play is not restricted; Chennai High Court order
3/8/2021
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு கொண்டு வந்த, இந்தச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்ததுடன், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது. உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை.
இவ்வாறு தீர்ப்பில் கூறினார்கள்.