தொடர் அமளியால் 6 எம்.பி.க்கள் சஸ்பெண்டு; நாடாளுமன்றம் 12-வது நாளாக முடக்கம்
1 min read
6 MPs suspended due to series of amalgamations; Parliament adjourned for the 12th day
4.8.2021-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19- ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இ்ந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் 12-வது நாளாக இன்றும் அவையில் கடும் அமளி நீடித்தது. அமளிக்கு இடையே மக்களவையில் தேங்காய் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து அமளியில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.