தமிழகத்தில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா; 38 பேர் சாவு
1 min read
Corona for another 1,949 in Tamil Nadu; 38 deaths
4.8.2021
தமிழகத்தில் நேற்று 1,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 38 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழக்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு 1,908 ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று 1,949- ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1949 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,096 பேர் ஆண்கள், 853 பேர் பெண்கள். 2,011 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,13,087 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவில் இருந்து 38 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,197 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை
கோவையில் 226 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 154 பேருக்கும், தஞ்சாவூரில் 110 பேருக்கும், சென்னையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 99பேருக்கும், திருப்பூரில் 92 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தென்காசில் 9 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 17 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர்.