தமிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரேனா: 33 பேர் சாவு
1 min read
Corona for 1,997 people in Tamil Nadu today: 33 dead
5.8.2021
தமிழகத்தில் இன்று 1,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 1943 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 1997 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,164 பேர் ஆண்கள், 833 பேர் பெண்கள். இன்று 1,943 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,15,030 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 33 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை
கோயைில் இன்று 220 பேருக்கும், சென்னையில் 196 பேருக்கும், ஈரோட்டில் 161 பேருக்கும், செங்கல்பட்டில் 130 பேருக்கும், தஞ்சையில் 119 பேருக்கும், திருவள்ளூரில் 106 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 15 பேருக்கும், தூத்துக்குடியில் 20 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லையில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.