June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆகஸ்டு-2021 மாத ராசிபலன்

2 min read

Rasi Palan for August 2021

6.8.2021

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு நன்மை தருவார். மேலும் சுக்கிரன் 12-ந் தேதி வரையும், புதன்5-ந் தேதி வரையும் 23-ந் தேதிக்கு பிறகும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலனை தருவார்கள். எந்த ஒரு காரியத்தையும் 12-ந் தேதிக்குள் செய்தால் சிறப்பை தரும். அதன்பிறகு சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.
குடும்பம்: சுக்கிரனால் மாதத் முற்பகுதியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பண வரவு இருக்கும். புதனால் 5-ந் தேதி வரை பொருள் சேரும். வீட்டிற்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். 23-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பொருளாதார வளம் மேம்படும்.மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். 7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் 22,23,24-ந் தேதிகளில் அவர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். 1,27,28 ஆகிய தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகம்: வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 5-ந் தேதிக்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். 23-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிட்டும்.
வணிகம்: லாபம் அதிகரிக்கும்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.12-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்து வரும் பிரச்சினை 16-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பின் எதிரிகள் வகையில் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தி லாபத்தை அதிகரிக்க செய்யலாம். சந்திரனால் 2,3,4,25,26,29,30,31 ஆகிய தேதிகளில் தடைகளை சந்திக்க நேரிடலாம். 12,13-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர் சிறப்பான நிலையை காணலாம். நற்பெயருக்கும் புகழுக்கும் பங்கம் வராது. கமூக நல சேவகர்கள், அரசியல் வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள்: பின்தங்கிய நிலை மறையும். 5-ந் தேதி வரையும் 23-ந் தேதிக்கு பிறகும் புதன் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். படிப்பில் ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். மாத இறுதியில் கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
பெண்கள்: முன்னேற்ற பாதையில் செல்வர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். 9,10,11-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். 14,15 ஆகிய தேதிகளில் விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர்களால் நற்சுகம் ஏற்படும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.16,17-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. 18,19-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
அதிர்ஷ்டம்: 2,3 அதிர்ஷ்ட எண்ணாகும்.மஞ்சள்,பச்சை நலம் தரும் நிறம். 1,5,6,12, 13,14,15, 20,21,22,23,24,27,28 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: விநாயகரையும் ஆஞ்சநேயரைம் வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை சனீசுவரனை வணங்கி ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம். இப்படி செய்தால் தடைகள் நீங்கி நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! சிறப்பானதாக அமையும். சூரியன் 16-ந் தேதி வரையும், புதன் 5-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். அதோடு சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். பணப்புழக்கத்துக்கு எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.மதிப்பு மரியாதை இருக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.
குடும்பம்: மாதத் முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.புதிய உறவு உருவாகும். 5-ந் தேதி புதன்இடமாறுவதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும்.12-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். இறைஅருள் கிடைக்கும். 9,10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் அதிக நெருக்கத்தை தவிர்க்கவும். அதேநேரம் 25,26-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைகளை முறியடித்து நன்மைகளை கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 22,23,24-ந்தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம்.5-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த பிற்போக்கான நிலை அகலும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் 23-ந் தேதிக்கு பிறகு வேலையில் கவனமாக இருக்கவும்.வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.
வியாபாரிகள்: முன்னேற்றம் காணலாம். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 4-ந் தேதிக்கு பிறகு மறையும்.17-ந் தேதி வரை சூரியனால் வியாபாரம் நல்ல அனு கூலத்தை கொடுக்கும். கூடுதல் பணப்புழக்கத்தை பெறலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அதன்பிறகு பெண்களால் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு. பணப்புழக்கம் சற்று குறையும். ஆனாலும் தேவைக்கு பங்கம் வராது. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 14,15-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 1,5,6,27,28-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் திருப்தியுடன் காண்ப்படுவர். 12,13-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: கல்வி, கேள்விகளில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்கவும்.
விவசாயிகள்: சீரான நிலையில் இருப்பர். பாசிபயறு, காய்கறி, கீரை வகைகள், மற்றும் பழவகைகள் ஆகிய வற்றில் நல்ல மகசூலை காணலாம். கால்நடைச் செல்வம் பெருகும்.
பெண்கள்- நற்பெயர் எடுப்பர். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபத்தை பெறுவர். 12-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.7,8-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 16,17-ந் தேதிகள் சிறப்பாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 2,3,4,29,30,31-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்
உடல் நலம்: சிறப்பாக இருக்கும். செவ்வாயால் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 20,21-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.18,19-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்:4,7ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, பச்சை 16-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும். 2,3,4,7,8,14,15,16,17,22,23,24, 25,26,29,30,31 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு பூஜை செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். 17-ந் தேதிக்கு பிறகு சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! தொடக்கத்தை விட மாத பிற்பகுதியில் கூடுதல் பலனை காணலாம். சூரியன் 17-ந் தேதியும், புதன் 24-ந் தேதியும் சாதகமான இடத்துக்கு வந்து நன்மைகளை தருவார்கள்.அதோடு செவ்வாய்,கேது,குரு,சுக்கிரன் ஆகியோரின் நற்பலன்களும் தொடரும். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது இதனால் இம்மாதம் சிறப்பானதாக அமையும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பொருளாதார வகையில் சிறப்பான நிலை இருக்கும்.புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர்,செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 4-ந் தேதிக்கு பிறகு மறையும்.சூரியனால் 16-ந் தேதிக்கு பிறகு சேமிப்பு அதிகரிக்கும். வீண் விரயம் இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.
குடும்பம்: உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். வசதிகள் பெருகும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர். புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.5,6-ந் தேதிகளில் பெண்களால் பணம் கிடைக்கும். 1,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதேநேரம் 12,13-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்:போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மேல்அதிகாரிகள் தகுந்த நேரத்தில் உதவுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.25,26-ந்தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். 16-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த பிற்போக்கான நிலை 23-ந் தேதிக்கு பிறகு அகலும் அதன்பிறகு உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும்.
வியாபாரம்: கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பொருள் வரவு அதிகரிக்கும். குறிப்பாக 16-ந் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை ஏற்படும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன23-ந் தேதிக்கு பிறகு மறையும்.2,3,4,7,8,29,30,31-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். 16,17-ந் தேதிகளில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்
கலைஞர்கள்:புகழோடும், பாராட்டோடும் திகழ்வர்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு விருது கிடைக்கலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள்:அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: நெல், கோதுமை, பயறு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 23-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவர்.ஆடம்பர பொருட்களை வாங்கலாம். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.பெண் காவலர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.12-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.அக்கம் பக்கத்தினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 9,10,11-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். 18,19 -ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான நோய் 16-ந் தேதிக்கு பிறகு குணம் ஆகும். மருத்துவச் செலவு குறையும். 20,21-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 22,23,24-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம்.சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
அதிர்ஷ்டம்: 7,9ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, மஞ்சள் சிவப்பு 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும். 1,5,6,9,10,11, 16,17,18,19,25,26,27,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். புதன் கிழமை புதனுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்றதை தானம் கொடுங்கள். துர்க்கையை வழிபட்டால் மேலும் வசதிகள் கிடைக்கும். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! கடந்த மாதம் போல இப்போதும் சுக்கிரன்,ராகு மட்டும் நன்மைகளை தருவார்கள். மற்றய கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. எந்த ஒருகாரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க சிற்சில தடைகளை சந்திக்க வேண்டிய திருக்கும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், வீண் மனக்கவலை முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பம்: குடும்பத்தில் உள்ள பெண்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும்.12-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குறிப்பாக 7,8-ந் தேதிகளில் அவர்களால் அனுகூலம் கிடைக்கும். 2,3,4,29,30,31 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரத்தில் 14,15-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம்: அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 12-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனை கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 23-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 1,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம்.
வணிகம்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சுக்கிரனால் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 17-ந் தேதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். 5,6,9,10,11-ந்தேதிகளில் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். 18,19-ந் தேதிகளில் பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனாலும் பிற்போக்கான நிலை உருவாகாது.
பொதுநலம்: சிறப்பான பலனை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பணப் புழக்கத்திற்கு எந்த குறை இருக்காது.16,17-ந்தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும்.
விவசாயம்: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். நெல்,உளுந்து போன்ற தானிய வகைளில் நல்ல மகசூல் கிடைக்கும்.பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்:ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். 5-ந் தேதி வரை வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். அதன்பிறகு கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது.12,13-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.20,21-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான உபாதைகள் வரலாம். பெரிய பாதிப்பு ஏற்படாது. 22,23,24-ந் தேதிகளில் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. 25,26-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு உபாதை வரவாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம்: 4,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,நீலம் நலம் தரும் நிறம்.1,2,3,4,7,8,12,13,18,19,20,21,27,28,29,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளையும் வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியையும் வழிபடுங்கள். சனிக்கிழமை சனிஈசுவரனுக்கு அர்ச்சனை செய்து ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். அதிகாலையில் குளித்து சூரிய வழிபாடு நடத்துங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! தற்போது உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் இந்த மாதம் 12-ந் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார். இவ்வாறு மாறினாலும் பல்வேறு நன்மைகளை அள்ளித் தருவார். மேலும் குரு,சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். பொருளாதார வளம் இருக்கும். சுக்கிரனால் தேவையான பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும். மதிப்பு மரியாதை சிறக்கும். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம்: மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 9,10,11-ந் தேதிகளில் அவர்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். பெண்களால் பொருள் சேரும். 5,6-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 16,17-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 23-ந் தேதிக்கு பிறகு புதனால் அவமரியாதைக்கு உள்ளாகும் நிலை வரலாம். வீண்விவாதங்களை தவிர்க்கவும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம்.அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். எந்த காரியத்தையும் அதிக முயற்சி எடுத்தால் அதை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
உத்தியோகம்: குரு சிறப்பாக இருப்பதால் எந்த பின்னடைவும் வராது. உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும்.சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 12-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 16-ந் தேதிக்கு பிறகு இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். வேலையில் பளுவும் அலைச்சலும் இருந்தாலும் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். மேல்அதிகாரிகள், சகஊழியர்களிடம் அனுசரித்து போகவும். 2,3,4,29,30,31 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க பெறலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: கூடுதல் லாபம் கிடைக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பகைவர்களின்சதி, இடையூறுகள் மறையும். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சூரியனும், புதனும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிக அலைச்சலும், பளுவும் இருக்கும். 7,8,12,13-ந் தேதிகளில் தடைகள் வரலாம். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ் தானாக வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம்.12-ந் தேதிக்கு பிறகு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் அதிகமாக உழைத்தான் முன்னேற்றம் காணமுடியும். குருவால் உங்கள் முயற்சி வீண்போகாது. ஆசிரியர்கள்,ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் வருமானத்தில் திருப்தி காண்பர்.நெல்,கரும்பு,எள், கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். குதூகல நிலையில் இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14,15-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். 22,23,24 ஆகிய தேதிகள் உன்னதமான நாளாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 25,26-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.1,18,19,27,28-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
அதிர்ஷ்டம்: 4,6 அதிஷ்ட எண் ஆகும். மஞ்சள், வெள்ளை யோகம் தரும் நிறம். 2,3,4,5,6,9,10,11,14,15,20,21,22,23,24,29,30,31. ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் .மாதத் தொடக்கத்தில் கூடுதல் பலன்களை காணலாம்.புதன்5-ந் தேதி வரையும், சூரியன்16-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். அதோடு சுக்கிரன்12-ந் தேதிக்கு பிறகும்,கேதுமாத முழுவதும் சாதகமாக நின்று நன்மை தருவார்கள்.கடவுளின் கருணை உங்களுக்கு கிடைப்பதால் மற்றய கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதமான பலன்கள் நடக்காது.
சூரியனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 17-ந் தேதிக்கு பிறகு வீண் செலவுகள் ஏற்படலாம்.அதன்பின் எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரத்தை எடுத்துதான் முடிக்க வேண்டியதிருக்கும். உங்கள் செல்வாக்குக்கு குறை இருக்காது.
குடும்பம்: மகிழ்ச்சி நீடிக்கும். வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பண வரவு இருக்கும்.12-ந் தேதிக்கு பிறகு பெண்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் அனுகூலம் கிடைக்கும்.12,13-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை கிடைக்கும். 18,19-ந் தேதிகளில் அவாகள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 23-ந் தேதிக்கு பிறகு புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சனை, உறவினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன ஏற்படலாம்.
உத்தியோகம்: மாதத் முற்பகுதியில் சூரியன்,புதன் சாதமாக இருப்பதால் கூடுதல் பலனை கிடைக்க பெறுவர். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை16-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். மாத இறுதியில் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். 5,6-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம்.
வணிகம்: அரசின் உதவி கிட்டும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நல்ல பொருளாதார வளத்தை காணலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.அதன் மூலம் பல்வேறு முன்னேற்றங்களை அடையலாம். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 16-ந் தேதிக்கு பிறகு சிலர் நஷ்டத்தை சந்திக்கலாம். எனவே அதன்பின் ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் இறங்க வேண்டாம். ஆனால் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 22,23,24-ந் தேதிகளில் எதிர்பராத பணவரவு கிடைக்கும். 9,10,11,14,15-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு முதலியன 12-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு நிலைமை சீராகி வளர்ச்சி காண்பர்.சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். விருது அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் சிறப்பான பலனை காண்பர். 20,21-ந் தேதிகளில்சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: கல்வி, கேள்வி களில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோனை கிடைக்கும்.5-ந் தேதிக்கு பிறகு சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் கல்வியில் சிறப்படைவர்.
விவசாயம்: சிறந்த மகசூலை பெறுவர். நெல், பாசிபயறு, கொள்ளு, மற்றும் பழ வகைகள் நல்ல மகசூலை தரும். புதிய சொத்து வாங்கலாம். 5-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: நற்பெயர் எடுப்பர். குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். ஆடம்பர பொருட்கள் கிடைக்க பெறுவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். குருவின் பார்வையால் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 12,13,25,26-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 16,17-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
உடல்நலம்: உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் பித்தம், மயக்கம், கண் போன்ற உபாதைகள் வரலாம். 1,27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. 2,3,4,29,30,31-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்டம்: 5,6 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு 16-ந் தேதி வரை செந்தூரம்,அதன்பின்வெள்ளைஅதிர்ஷ்ட நிறங்களாகும்.5,6,7,8,12,13,16,17, 22,23,24,25,26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
வழிபாடு:சனிக்கிழமை சனீஸ் வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வியாழன் அன்று தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள் 16-ந் தேதிக்கு பிறகு சூரியனை காலையில் வணங்குங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! சூரியன்,செவ்வாய்,குரு ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். சுக்கிரன்12-ந் தேதி வரையும்,புதன் 23-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். காரிய அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 16-ந் தேதிக்கு பிறகுமதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.
குடும்பம்:அனுகூலமான சம்பவங்கள் நடக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.14,15-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பர். அவர்களால் நன்மை கிடைக்கும். 9,10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கிலேசங்கள் வரலாம்.
உத்தியோகம்: பெண்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். 7,8-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வியாபாரம்: சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.புதனால் பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.12,13,16,17-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். 25,26-ந் தேதிகளில் பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்: உறவினர்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப் படுவர்.12-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள்,பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறுவர்.நினைத்தது நிறைவேறும்.நல்ல அந்தஸ்தில் இருப்பர்.பதவி கிடைக்க பெறலாம்.
மாணவர்கள்:குருபுதன் சாதகமாக இருப்பதால் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகைசூடும் வல்லமை கிடைக்கும்.விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.
விவசாயிகள்:பாசிபயறு நெல்,மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்..23-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர்.திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களு -க்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14,15-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.1,27,28-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய், கண் தொடர்பான உபாதையால் அவதிபடுபவர்கள் 16-ந் தேதிக்கு பிறகு குணம் அடைவர். 5,6,22,23,24-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 2,3,4,29,30,31-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,2,9ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை, செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும்.1,7,8,9,10,11,14,15,18,19,25,26,27,28.ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
வழிபாடு:ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிசெய்யுங்கள்.12-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காயத்திரி தேவியை வணங்கி வரவும். ஏழைகளுக்கு மொச்கை தானம் செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக உங்களுக்கு இருந்த அலைச்சல் இனி இருக்காது. அவப்பெயர் மறைந்து படிப்படியாக செல்வாக்கு அதிகரிக்கும். இதற்கு சூரியன் 17-ந் தேதி 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்துக்கு வருவதே காரணம். புதன்5-ந் தேதிக்கு பிறகும்,சுக்கிரன் 12-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள்.அதோடு சனியின் நன்மைகளும் தொடரும்.அவரின் பலத்தால் பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது.
உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும்16-ந் தேதிக்கு பிறகு விலகும்.அதன்பிறகு நினைத்த காரியம் நிறைவேறும்.தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
குடும்பம்:சிறப்பாக இருக்கும். வசதிகள் கிடைக்கும். நற்சுகம் கிடைக்கும்.5-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். 16,17-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.12-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.12,13-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 22,23,24-ந் தேதிகளில் அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சிறப்பான பலனை அடைவீர்கள். 5-ந் தேதிக்கு பிறகு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் இட மாற்றத்தை காணலாம். 9,10,11-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வணிகம்: கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தாலும் பளு தெரியாத வண்ணம் வருமானம் கிடைக்கும். 5-ந் தேதிக்கு பிறகு வியாபாரம் மேலும் சிறப்படையும்.வளர்ச்சி இருக்கும். லாபம் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். .உங்கள் வளர்ச்சிக்கு பெண் பின்னணியாக இருப்பார். கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது வரும். குறிப்பாக 14,15,18,19-ந் தேதிகளில் தடைகள் வரலாம்.அதனை சற்று முயற்சி எடுத்து முறியடித்து விடுவீர்கள்.எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர். 1,27,28-ந் தேதிகளில் பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன 12-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு சுக்கிரனின்பலத்தால் முன்னேற்றம் காணலாம்.அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் கவுரவத்தோடு காணப்படுவர்.25,26-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்- கல்வியில் நல்ல வளத்தை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.5-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள்.
விவசாயம்: நல்ல வருமானத்தை காணலாம். நெல், பாசிபயறு,சோளம், கீரை வகைகள், காய்கறிகள் போன்ற பயிர்களில் நல்ல மகசூலை காணலாம்.ஆடு,கோழி, பசு,கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புது சொத்து வாங்கும் எண்ணம் தற்போது நிறைவேறாது. சில காலம் பொறுத்து இருங்கள். 5-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: உற்சாகமான உயர்ந்த நிலையை அடைவீர்கள்.5-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 20,21-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். 2,3,4,29,30,31-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
உடல்நலம்: சிறப்படையும்.செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். 5,6-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.7,8-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.வயிறு தொடர்பான லேசான உபாதைகள் வரலாம்
அதிர்ஷ்டம்: 5,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.கறுப்பு,பச்சை 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள்.1,2,3,4,9,10,11,12,13,16,17,20,21,27,28,29,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிசெய்யுங்கள்.16-ந் தேதி வரை தினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! முக்கிய கிரகங்களில் ராகு பக்க பலமாக இருப்பதால் இந்த மாதத்தை சிறப்பாக நகர்த்தலாம். சுக்கிரன்12-ந் தேதி வரையும், புதன் 5-ந் தேதி வரையும் 23-ந் தேதிக்குபிறகும் சாதமான நிலையில் இருக்கிறார்கள். மற்றய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சற்சில விஷயங்களில் சற்று கவனமாக இருப்பதும் நல்லதே.வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குடும்பம்: குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். மாதத் தொடக்கத்தில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பொருளாதார விஷயத்தில் திருப்திகரமான போக்கு இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன்பிறகு சகோதரிகளின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும். நற்சுகம் கிடைக்கும். 14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 25,26-ந் தேதிகளில் உறவினர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
உத்தியோகம்-சீரான நிலையில் இருப்பர்.வேலைப்பளு இருந்தாலும் மன நிம்மதி இருக்கும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடன் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.12,13-ந் தேதிகளில் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரம்: ராகுவின் பலத்தால் எந்த காரியத்தையும் தங்கு தடையின்றி முடிப்பீர்கள். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். உங்கள் ஆற்றலினால் புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை தரும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் நிறைந்த உடல் உழைப்பில் அறிவு பூர்வமாக செயல்பட்டு நல்ல லாபத்தை காணலாம். 2,3,4,29,30,31 ஆகிய தேதிகளில் எதிர்பாராத பண வரவு இருக்கும். அதே நேரம் 16,17,20,21ஆகிய தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 16-ந் தேதி வரை அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து 23-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர்.
கலைஞர்கள்:சீரான முன்னேற்றம் காண்பர்.பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 12-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.அரசியல்வாதிகள்,பொதுநல சேவகர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.1,27,28-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: முயற்சி எடுத்து படித்தால் ஓரளவு பலன்கள் கிடைக்கும். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சிலருக்கு வீண் மன வேதனையால் கல்வியில் நாட்டம் இல்லாமல் போகலாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அதன்பிறகு புதனால் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகைசூடும் வல்லமை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.
விவசாயிகள் வருமானத்திற்கு குறை இருக்காது. ஆனால் அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். கரும்பு, எள், கொள்ளு போன்ற பயிர்கள் நல்ல வருமானத்தை கொடுக்கும். வழக்கு, விவகாரங்கள் சீராக இருக்கும்.
பெண்கள்: சிறப்பாக காணப்படுவர். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அக்கம் பக்கத்தினரிடம் பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். அதன்பிறகு வேலைபளு குறையும். புதன் சிறப்பாக இருப்பதால் எந்த பின்னடைவும் வராது. உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். 22,23,24-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். 5,6-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.7,8-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.9,10,11-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு பிரச்சினை வரலாம்.
அதிர்ஷ்ட எண்-6,8.நீலம்,வெள்ளை யோகம் தரும் நிறங்கள் ஆகும். 2,3,4,5,6,12,13,14,15,18,19,22,23,24,29,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை நமஸ்கரியுங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வரலாம். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே! முக்கிய கிரகங்களில் குரு,சுக்கிரன்,கேது தொடர்ந்து நற்பலன்களை தருவார்கள். அதோடு புதன் 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நற்பலனை கொடுப்பார். மற்றைய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. அலைச்சலும், பளுவும் 16-ந் தேதிக்கு பிறகு குறையும். உங்களுக்கு இருந்த அவமரியாதை படிபடியாக விலகி செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும்.
புதனால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு , மனக்கவலை முதலியன 5-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
குடும்பம்- வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். 20,21-ந் தேதிகளில் சகோதரிகள் உதவிகரமாக இருப்பர்.16,17-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நனமையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் 1,27,28-ந் தேதிகளில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. 23-ந் தேதிக்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்..
உத்தியோகம்- சிறப்படையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.14,15-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். 16-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 23-ந் தேதிக்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்பவர்கள் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை வேறுயாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
வியாபாரம்-குரு,கேதுவின் பலத்தால் நல்ல லாபம் கிடைக்க பெறலாம். உங்களுக்கு இருந்த தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். குடும்ப பிரச்சினையில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்தலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 5,6-ந் தேதிகளில் திடீர் பண வரவு ஏற்படும். 18,19,22,23,24-ந் தேதிகளில் சிறு சிறு தடைகள் வரலாம்.16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.23-ந் தேதிக்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
கலைஞர்கள்- புகழ், பாராட்டு கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்படைவர். பெண்களால் உயர்வு பெறுவர்.
மாணவர்கள்- குருவால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி பெறுவர். நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கொள்ளு, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள் போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்- அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். கணவரின் அன்பு கிடைக்க பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 6-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 25,26-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். 7,8-ந் தேதிகளில் சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்- சிறப்பாக இருக்கும். அலைச்சல், அவப்பெயர், வயிறு தொடர்பான உபாதைகள் போன்றவை 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.9,10,11-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.12,13-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு பிரச்சினை வரலாம்.
அதிர்ஷ்டம்- 3,7 யோகமான எண்கள். வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். 5,6,7,8,14,15,16,17,20,21,25,26ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு- தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள. ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்ச நேயரை வழிபட தவறாதீர்கள். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். 23-ந் தேதிக்கு பிறகு புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள் அல்லது பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் 16-ந் தேதி வரையும், புதன் 5-ந் தேதி வரையும் 23-ந் தேதிக்கு பிறகும் சாதகமாக உள்ளார்கள். சுக்கிரன்12-ந் தேதிக்கு பிறகு சாதமான இடத்துக்கு மாறுகிறார். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.
குடும்பம்- திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.12-ந் தேதிக்கு பிறகு வசதிகள் பெருகும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக 22,23,24-ந் தேதிகளில் அவர்களால் அதிக அனுகூலம் காணலாம்.18,19-ந்தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மை ஏற்படும். ஆனால் 2,3,4,29,30,31-ஆகிய தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 22,23,24-ந் தேதிளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தம்பதியினர் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக் கவலை ஏற்படலாம்.அதன்பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
உத்தியோகம்- சூரியனால் இடையூறுகளை எளிதில் முறியடிப்பீர்கள். நல்ல பலனையும் கிடைக்க பெறுலாம். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 16,17-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 16-ந் தேதிக்கு பிறகு சுமாரான நிலையில் இருப்பீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும்.வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.
வியாபாரிகள்-நல்ல லாபம் கிடைக்க பெறுவர். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சுக்கிரனால் 12-ந் தேதி வரையில் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.அதன்பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 20,21,25,26-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 7,8-ந் தேதிளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள்-ஸ்திர தன்மையில் இருப்பர்.புகழ்,கவுரவத்திற்கு பங்கம் வராது. பெண்களால் நீங்கள் பட்டு வந்த துன்பம் 12-ந் தேதிக்கு பிறகு அடியோடு விலகும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சுமாரான நிலையில் இருப்பர்.5,6-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
மாணவர்கள்- புதனால் கல்வியில் தொய்வு நிலை ஏற்படாது. 23-ந் தேதிக்கு பிறகு கூடுதல் பலனை காணலாம். ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் மேலும் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்- பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்- குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை குடும்பதாரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். அதன்பிறகு குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும்.தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 1,27,28-ந் தேதிகளில் நகை-ஆபரணங்கள் வாங்கலாம். .பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். 9,10,11-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.
உடல் நலம்- சீராக இருக்கும். 16-ந் தேதிக்கு பிறகு சூரியனால் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.12,13-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.14,15-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டம்- 2,4 மற்றும் மாத தொடக்கத்தில் 3 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.செந்தூரம்,வெள்ளை அதிர்ஷ்ட நிறங்களாகும்.1,7,8,9,10,11,16,17,18,19, 22,23, 24,27,28ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்
வழிபாடு- சனிக்கிழமை சனீஸ் வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.16-ந் தேதிக்கு பிறகு சூரியனை வணங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். இதனால் குடும்ப பிரச்சினை அகலும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! கடந்த மாதத்தை விட கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மாத பிற்பகுதியில் அதிக நன்மை கிடைக்கும். புதன் 5-ந் தேதிக்கு பிறகும், சூரியன்16-ந் தேதிக்கு பிறகும் சாதமான இடத்துக்கு மாறுகிறார். அதோடு செவ்வாய்,சனி ராகு ஆகியோரின் நற்பலன்களும் தொடரும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.காரிய அனுகூலம் ஏற்படும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பம்- வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். பொன், பொருள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 5-ந் தேதிக்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். 25,26-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 5,6-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.அதே நேரம் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம்- பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 5-ந் தேதிக்கு பிறகு வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.எதிரிகளின் சதி திட்டம் முறியடிக்கப்படும்.17,18-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிட்டும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்- லாபம் அதிகரிக்கும். வியாபாரம் வளர்முகமாக இருக்கும்.முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து 16-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர் உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள். புதிய தொழில் தொடங்கி அதை சிறப்பாக நடத்தி லாபத்தை அதிகரிக்க செய்யலாம். 22,23,24,27,28 ஆகிய தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். 9,10,11-ந் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பொதுநலம்- முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 12-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதிய ஒப்பந்தம் அதிக முயற்சியின் பேரில் கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்- சிறப்படைவர். நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.
விவசாயிகள் நல்ல மகசூலை காணலாம்.ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்- மாதத் தொடக்கத்தில்சிலரது குடும்பத்தில் வீணான மனக்குழப்பம் உருவாகலாம். பொறுமையுடன் இருந்தால் சிறப்பு பெறலாம். 5-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர் களுக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.2,3,4,29,30,31-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 12,13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும்.
உடல் நலம்- சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம். 16-ந் தேதிக்கு பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படும். 16,17-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.14,15-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்-1,9ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். சிவப்பு, நீலம் 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள். 2,3,4,9,10,11,12,13,18,19,20,21,25,26, 29,30,31.ஆகிய தேதிகள் அனுகூல மான நாட்களாக அமையும்.
வழிபாடு- வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழன் அன்று தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். மேலும் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.16-ந் தேதிவரை சூரியனை தரிசனம் செய்ய தவறாதீர்கள். 23-ந் தேதிக்கு பிறகு குலதெய்வத்தை வணங்கி பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.