June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட திருடன்

1 min read

The thief who got stuck in the ATM machine

6.8.2021

நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே அணியாபுரத்தில், தனியார் நிறுவன ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. நேற்று நள்ளிரவு, 12 மணிக்கு, மோகனுார் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து சத்தம் வந்துள்ளது. சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம்., இயந்திரத்தை பார்த்தனர். அங்கு, வட மாநில இளைஞர் ஒருவர், ஏ.டி.எம்., இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. ஏ.டி.எம்., இயந்திரத்தின் பின்புறம் ஓட்டையிட்டு உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்ற போது, அந்த இளைஞர் சிக்கிக் கொண்டார்.

அவரை பிடித்து விசாரித்ததில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றது தெரியவந்தது. மேலும், பீகார் மாநிலம், கிழக்கு சாம்ரான் பகுதியை சேர்ந்த உபேந்திரராய், 28 என்பதும், அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில், மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கைது

அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். போலீசார் ரோந்து சென்று, கொள்ளையனை பிடித்ததால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த, 2.65 லட்சம் ரூபாய் தப்பியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.