தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு கொரோனா; 23 பேர் சாவு
1 min read
Corona for 1,929 people in Tamil Nadu today; 23 deaths
9.8.2021
தமிழகத்தில் இன்று 1,929 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளனர். 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1886 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,77,237 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,109 பேர் ஆண்கள், 820 பேர் பெண்கள். 1,886 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,470 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,340 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கோவை
கோவையில் இன்று 235 பேருக்கும், சென்னையில் 182 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், செங்கல்பட்டில் 107 பேருக்கும், தஞ்சையில் 95 பேபருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் 31 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடி 14 பேருக்கும் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.