இந்தியாவில் ஒரே நாளில் 35,499 பேருக்கு கொரோனா; 447 பேர் சாவு
1 min read
Corona for 35,499 people in a single day in India; 447 deaths
9.8.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 35,499-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 447 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவி்ல் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 35,499 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நளில் 447-பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,28,309 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 4,02,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மொத்த பாதிப்பு விகிதம் 2.35 சதவீதமாகவும் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.59 சதவீதமாகவும் கொரோனா மீட்பு விகிதம் 97.40 சதவீதமாக ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 50,86,64,759 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது; நேற்று மட்டும் 16,11,590 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” என கூறப்பட்டு உள்ளது.