June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா; 33 பேர் சாவு

1 min read

Corona for 1,942 people in Tamil Nadu today; 33 deaths

12.8.2021
தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர். 33 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,83,036 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,93,26,076 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோன உறுதியானவர்களில் 1,115 பேர் ஆண்கள், 827 பேர் பெண்கள்.
இன்று 1,892 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,28,209 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,428 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 243 ஆக இருந்த நிலையில் இன்று 217ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 249 பேருக்கும், ஈரோட்டில் 183 பேருக்கும், செங்கல்பட்டில் 119பேருக்கும், தஞ்சையில் 102 பேருக்கும், சேலத்தி்ல் 94 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லையில் இன்று 13 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.