இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா; 493 பேர் சாவு
1 min read
Corona for 36,083 newcomers in India; 493 deaths
15/8/2021
இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 493 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,21,92,576 ஆக அதிகரித்துள்ளது.
493 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,76,015 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,85,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 54,38,46,290 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 73,50,553பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.