June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் விருந்து; பதக்கங்களை காட்டி மகிழ்ச்சி

1 min read

PM Banquet for Olympians; Glad to show off the medals

16/8/2021
ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரமர் நரேந்திர மோடி விருந்து கொடுத்தார்.

ஒலிம்பிக் வீரர்கள்

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை நம் நாடு வென்றுள்ளது. தடகளப் போட்டியில் 120 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தங்கத்தை வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா, புதிய சாதனை நாயகனாக திகழ்கிறார். ஆக்கியிலும் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது இந்திய விளையாட்டு துறைக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை வெகுவாக பாராட்டினார். குறிப்பாக, ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், தேசத்தின் இதயங்களை வென்றது மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரையும் ஊக்குவிப்பதாக உள்ளனர்’ என்றார்.

விருந்து

இந்த நிலையில் இன்று, ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் பிரதமர் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் பங்கேற்றனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, தாங்கள் வாங்கிய பதக்கங்களை பிரதமரிடம் காட்டி வீரர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.