ஆப்கானிஸ்தானில் இருந்து 120 தூதரக அதிகாரிகள் குஜராத் வந்தனர்
1 min read
120 embassy officials came to Gujarat from Afghanistan
17.8.2021
ஆப்கானிஸ்தானில் இருந்து 120 தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்டு, அவர்கள் விமானப்படை சிறப்பு விமானம் மூலம் குஜராத் வந்தனர்.
தூதரக அதிகாரிகள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன. இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்ற ஏற்பாடு செய்தது.
இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் என, 120 பேரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக விமானப்படையை சேர்ந்த சி-17 சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் வந்தனர்
மீட்கப்பட்ட இந்தியர்களுடன் அந்த விமானம் குஜராத் ஜாம் நகரை வந்ததடைந்தது. ஜாம் நகரில் இருந்து அவர்களை டெல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.