June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,804 பேருக்கு கொரோனா; 32 பேர் சாவு

1 min read

Corona for 1,804 people in Tamil Nadu today; 32 deaths

17.8.2021

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,851 -ல் இருந்து 1,804 ஆக குறைந்துள்ளது. 32 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,917 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1804 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,92,24,674 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,013 பேர் ஆண்கள், 791 பேர் பெண்கள்.
இன்று 1,917 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,37,632 ஆக உயர்ந்துள்ளது.

32 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 32 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,579 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 205 ஆக இருந்த நிலையில் இன்று 209 ஆக சற்று அதிகரித்துள்ளது.

கோவையில் இன்று 206 பேருக்கும், ஈரோட்டில் 176 பேருக்கும், தஞ்சாவூரில் 121 பேருக்கும், சேலத்தில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் 20 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 8 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.