3 இடம் காலியாக உள்ள மக்களவைக்கு ஒன்றுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு
1 min read
Notice of election for only one of the 3 vacant Lok Sabha seats
17.8.2021
தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில், ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13-ந் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. எம்.பி.கள்
அதிமுக எம்.பி.,யாக இருந்த முகமது ஜான் மறைவை அடுத்து அந்த இடம் காலியானது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜ்யசபா எம்.பி.க்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். காலி இடங்கள் 3 ஆக அதிகரித்தது.
காலியாக உள்ள 3 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது.
13-ந் தேதி
இந்நிலையில் முகமது ஜான் மறைவால் காலியாக உள்ள இடத்திற்கு மட்டும், செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்கும். கடைசி நாள் 31-ந் தேதி.
வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 1-ந் தேதியும் வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 3-ந் தேதியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல்
செப்டம்பர் 13-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.வுக்கு வாய்ப்பு
3 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவிற்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்பிருந்தது. தனித்தனியாக நடத்தப்படுவதால் 3 இடங்களிலும் திமுக., வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.