June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொடநாடு விவகாரம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

1 min read

Kodanadu affair: AIADMK withdraws from assembly Outing

18.8.2021
கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கொடநாடு கொலை

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் போலீசார் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று எதிரொலித்துள்ளது.

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்ததும் அவர் பேச தொடங்கினார்.
கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

வெளிநடப்பு

“பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்” என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம்.

வெளிநடப்பு பற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, “திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

போராட்டம்

கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.