July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

எலிகளிடம் பரவும் 3 வகை கொரோனா

1 min read

3 types of corona spread to rats

19/8/2021
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் 3 வகையாக கொரோனா தற்போது எலிகளிடம் பரவி இருப்பது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா உருமாற்றம்

கொரோனா வைரசுகள் உருமாற்றம் அடைந்து புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அதில் சில வகை வைரசுகள் அதிகம் வீரியம் கொண்டதாக மாறி மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காம்மா, டெல்டா வகை வைரசுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகை வைரசுகள் விலங்குகளையும் தாக்குமா? என்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.

காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய சயின்ஸ் ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

எலிக்கு வைரஸ்

எலிகளை கொரோனா வைரசுகள் தாக்குமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஆல்பா, பீட்டா, காம்மா வைரசுகள் எலியை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் டெல்டா வைரசால் எலிகளை தாக்க முடியவில்லை.
ஆடு, மாடுகள், குதிரை போன்ற விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கினால் தடுப்பூசி மூலமோ அல்லது அவற்றை அழிப்பதன் மூலமோ கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் எலிகளுக்கு பரவினால் அதை கட்டுப்படுத்துவது கடினம். எனவே இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பது பற்றி ஆய்வு

இந்த ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்று இருந்த பெங்களூரை சேர்ந்த பேராசிரியர் வாசன் கூறும்போது, “கொரோனா வைரசின் தன்மை தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நாங்கள் மேற்கொண்டோம். அதில் எலிகளுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.