தமிழகத்தில் இன்று 1,702 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு
1 min read
Corona for 1,702 people in Tamil Nadu today; 29 deaths
19.8.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மேலும் குறைந்தது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 29 பேர்உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 1,892 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,41,432 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 19,864 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையில் இன்று மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 198 பேருக்கும், ஈரோட்டில் 147 பேருக்கும், தஞ்சாவூரில் 112 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், சேலத்தில் 94 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நெல்லை
நெல்லையில் 17 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.